Friday, April 26, 2019

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? -43

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ?
நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இளம் வயதிலிருந்தே பழக்கத்தால் பெறவேண்டிய ஒரு திறமை  இதனால் நேரத்தின் அருமையை அவ்வப்போது குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் .இப் பழக்கத்தால் ஒவ்வொருநாளும் கூடுதல் பணி செய்ய போதிய நேரம் கிடைக்கின்றது .குறைந்த நேரத்தில் நிறைவாகச் செய்வது வேலையின் பயனுறு திறனை அதிகரிக்கச் செய்கின்றது .இது நிறுவனங்களில் பணியாற்றும் போது நிர்வாகத் திறனை மேம்படுத்துகிறது. அதனால் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரித்து , தேவையில்லாத செலவுகள் தவிர்க்கப்பட்டு , பொருள் ஆதாயமும் அதிகரிக்கின்றது.
நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள உடனுக்குடன் திட்டமிட்டு தகுந்த சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ளவும் , முன்னுரிமை அளித்து செய்யவேண்டிய வேலைகளைச்  செய்யவும்  . தேவையில்லாத வேலைகளை விட்டுவிடவும்  தெரிந்து கொள்ளவேண்டும். ஆளுமைத் திறமைகளுள் நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் என்பதும் முக்கியமானது. இதை ஒருவரது இயல்பான அனுபவத்தின் மூலமே தெரிந்து கொள்ள முடியும் என்பதால் சிறப்புத் தேர்வு மூலமே இதைச் சரியாக மதிப்பிடமுடியும். ஒரு நிறுவனத்தின் செயல் திறனை அதிகரித்து பயனுறு திறனை அதிகரிக்க இது பெரிதும் உதவுகின்றது 
ஒரு குறிப்பிட்ட பணியில் இருக்கும் போது குறுக்கிடும் பிறவற்றைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறுக்கீடு புறத்திலிருந்து மட்டும் வருவதில்லை, தனக்குத் தானே குறுக்கீடாகவும் இருக்கமுடியும். கவலைப்பட்டு பணியை த் தாமதப்படுத்துவதும், பிறருடன் குறை கண்டு கோபப் பட்டு கவனத்தை இழப்பதும் . முக்கியமான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது செல்போன் பேசுவதும்  அகக் குறுக்கீடாகும் . 

No comments:

Post a Comment