Wednesday, April 10, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி - 29

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி?  
சிறந்த மாணவனாக இருப்பது இயல்பு நிலைக்கு அப்பாற்பட்ட நிலையே இல்லை. நாம் தான் இயல்பு நிலைக்குக் கீழாக நிலைதாழ்ந்து இருந்து கொண்டு ,சிறந்த மாணவனாக உருவாவது கடினம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இயற்கையில் இயற்கையாகவே இருக்கும் அனைத்தும் நிலையாக  நிலைத்திருப்பதுடன் ,சிறந்ததாகவும் இருக்கின்றன . நிலையாகவும் சிறந்ததாகவும் இருக்கும் எல்லாம் இயற்கையின் படைப்புக்களாக இருக்கின்றன. உயிரினங்கள் எல்லாம் இயற்கையின் படைப்புக்களே. அந்த உயிரினங்களின் வாழ்க்கை இயற்கையாக இருந்தால் வாழ்க்கையின் சிறப்புத்தன்மை இயல்பாகவே இருக்கும் என்பதே இயற்கை மனிதர்களுக்குக் கூறும் அறிவுரை . இயற்கையைப் பாதையை விட்டு விலகிச் செல்லும் எந்தச் செயலும் இயற்கையான முடிவை  அடையாததால் சிறப்படைவதில்லை . எனவே கல்வி கற்பதும்  இயல்பான முயற்சிகளின் விளைவாக இருக்கும் போது அது மிகைப்பாடான முயற்சிகளினால் சேதாரமடையாமல்  சிறப்பாக அமைகின்றது. ஒரு சிறந்த மாணவன் இயற்கையாகவே திறன்மிகு மாணவனாக இருக்கவேண்டும் என்ற அவசியமேயில்லை . சாதாரண மாணவர் இயல்பான ஈடுபாடுகளினால் ஒரு சிறந்த மாணவராக உருவாக முடியும். எவ்வித எதிர்ப்புமின்றி தன் உணர் உறுப்புக்களைக் கொண்டு கற்பதை இயல்பாகச் செய்கின்ற மாணவர்கள் எல்லோரும் சிறந்த மாணவர்களாக ஆகிறார்கள் .அதற்கான 5  கட்டளைகள் பின்வருமாறு.
1.ஒவொருநாளும் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் .  பிற அன்றாட வேலைகளைப் போல கல்வி கற்பதையும்  மேற்கொள்ள  வேண்டும். பிற வேலைகளில் காட்டப்படும் அதே அளவு ஆர்வத்தை கற்றலிலும் காட்ட வேண்டும் .  கற்றுக்கொள்வதில் இரண்டு நிலைகள் இருக்கின்றன . 
நீண்ட கால நினைவுத் தேக்கம் ,எண்ணப் பதிவிறக்கம் , போன்றவை மனப்பாடமாக கற்பதைத் மூளையில் திணித்துக் கொள்வதைவிட , அதை க் கொஞ்சம் கொஞ்சமாக  மெதுவாக , இயல்பாக கற்றுக் கொள்ளும் போது  கூடுதல் பயன்தருவதாக சிறப்பாக இருக்கின்றது. 
ஒரு மாணவன் ஒரு குறிப்பிட்ட பாடத்தை  ஒரே நாளில் மூன்று மணி நேரத்தில் , அதாவது 180  நிமிடங்களில் படித்து முடித்தான் . மற்றொரு மாணவன் அதே பாடத்தை ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்கள் வீதம் 12 நாட்களில் அதாவது 120 நிமிடங்களில் கற்றுக் கொண்டான் . இந்த இரு மாணவர்களையும் அந்த குறிப்பிட்ட பாடத்தில்  பெற்றுள்ள அறிவுத் திறனை ஆராய்ந்து பார்த்த போது விரைந்து கற்ற முதல் மாணவனை விட மெதுவாகக் கற்ற இரண்டாவது மாணவனே  சிறந்து விளங்கியது தெளிவாகியது .
இடையிடையேயான  ஓய்வுடன் கற்றுக் கொள்ளும் போது மன இறுக்கமின்றி மூளையில் பதிவேற்றம் செய்யப்படுவதால் , நீண்ட கால நினைவுகளுக்கு இயற்கையான உடல் ஒத்துழைப்பு இயல்பாகவே கிடைக்கின்றது.  படிப்பதில் காட்டப்படும் இந்த வேறுபாடே ஒரு  சாதாரண மாணவனை சிறந்த மாணவனாக்குகின்றது

No comments:

Post a Comment