Tuesday, April 17, 2012

arika iyarpiyal

அறிக அறிவியல்
கடலோரப் பகுதிகளில் கேணி தோண்டினால் நீர் உப்புக்கரிக்கும் என்று
நாம் எதிர்பார்க்கின்றோம் . ஆனால் எல்லா இடங்களிலும் அப்படி இருப்பதில்லை.
பல இடங்களில் நிலத்தடி நீர் உப்பின்றி சுவையாகவும் இருப்பதுண்டு . கடலின்
உவர் நீர் நிலத்தில் உடுருவி நிலத்தடி நீரை இங்கு எப்படி பாதிக்காமல்
இருக்கிறது ?

கடலோரப் பகுதிகளில் சுவை நீருடன் கூடிய கேணி அல்லது நீரூற்று க் களை
நாம் அதிகம் காண முடிகின்றது. சிலர் கடற்கரையில் குழி பறித்து சுவை நீரைச்
சேகரித்து விற்பனை கூடச் செய்வர் .உவர் நீர் அருகில் இருக்க சுவை நீர்
எப்படி க் கிடைகின்றது ? இது நெடுநாளாக குழப்பமாக இருந்தது.இது பற்றி
நுட்பமாக ஆராய்ந்த விஞ்ஞானிகள விடையைக் கண்டறிந்தனர்.
இது போன்ற கேணிகளில் சுவை நீர் கடல் நீர் மட்டத்திற்கு மேலிருந்து ஒரு
குறிப்பிட்ட ஆழம் வரை கிடைக்கக் கூடியதாக இருக்கின்றது.அடர்த்தி
மிக்க கடல் நீர் மற்றும் அடர்த்தி குறைந்த சுவை நீர் இவற்றிற்கு இடையேயுள்ள நிலை நீர்ம அழுத்த வேறுபாடு இதற்குக் காரணமாக இருக்கின்றது.

நிலத்தில் கடல் மட்டத்திலிருந்து h என்ற உயரத்தில் சுவை நீர்
கிடைப்பதாகக் கொள்வோம்.இந்த நீர் பாய்ந்தோடாமல் நிலையாக
இருக்கும் போது,இப்படுக்கை நிலத்தில் ஆழமாக விரிந்து பரவி இருக்கும்.
இந்த ஆழம் கடல் மட்டத்திலிருந்து H எனில்(H + h)குத்துயரம் உள்ள
சுவை நீரின் நீர்ம அழுத்தமும்,H குத்துயரம் உடைய கடல் நீரின் நீர்ம அழுத்தமும் சமமாக இருக்க வேண்டும் எனலாம் .தூய நீரின் அடர்த்தி
1000 என்றும் கடல் நீரின் அடர்த்தி 1025 என்றும் கொண்டால்
(H + h)1000 = H(1025).இது H = 40 h என்ற தொடர்பைத் தருகிறது.

No comments:

Post a Comment