Thursday, April 19, 2012

eluthaatha kaditham

எழுதாத கடிதம்
ஆசிரியர்கள் தங்களிடம் கல்வி கற்க வரும் மாணவிகளிடம்
தவறாக நடந்து கொள்ளவதும் ,ஒழுங்காகப் பாடம் கற்பிக்காமல்
தானே ஒழுக்கம் தவறுவதும் ,பயனற்ற பணி புரிவதும் இன்றைக்கு
அதிகமாகி வருகிறது. நாளிதழ்களில் இதைப் படிக்கும் போது
வருத்தம் மேலிட நாடித் துடிப்பு ஒரு நிமிடம் நின்று விடுகின்றதே .
போலீசே குற்றம் புரிவதும் ,குற்றம் புரிபவர்களுக்கு உற்ற
தோழனாய் இருப்பதும் ,குற்றவாளிகளால் பதிக்கப் பட்ட
மக்களுக்கு உதவத் தவறுவதும் இன்றைக்கு தொடர்ந்து
அதிகமாகிக் கொண்டே வருகிறது. தெரியாது என்பதால்
அப்படி இல்லவே இல்லை என்று கூறிவிட முடியாது .
பிரபஞ்சத்தைப் பற்றிக் கூட யாருக்கும் தெரியாது அதற்காக
பிரபஞ்சமே இல்லை என்று கூறுகின்றோமா ?
நாளிதழ்களில் இதைப் பற்றி படிக்கும் போது நெஞ்சம் குமுறுகின்றது.
கண்கள் இரத்தத்தை கண்ணீராய் சிந்துகிறதே .
அதிகாரிகள் மக்களின் பணியார்களாய் நடந்து கொள்வதில்லை.
இலஞ்சம் பெறுவதற்காக தவறுதலான வழிகாட்டல்கள் .
இலஞ்சம் பெறுவது, பெறுவதற்கான சூழலை உருவாக்குவதும்,
ஒளிவு மறைவு இன்றி நேர்மையாகப் பணியாற்றாமல் ஊதியம்
பெறுவதும் காலத்தின் கொடுமை . இதை எல்லாம் கண்ணால்
காணும் போத மாறாத மனக் கவலை வாழ்கையை அரிக்கின்றதே
அரசியல் வாதிகளிடம் தொண்டு இல்லை,தொல்லை உண்டு,பொது நலம் இல்லை, தன்னலம் உண்டு,கனிவில்லை கயமை யுண்டு .இப்படி நல்ல குணங்கள் எதுமில்லாமலே
வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு தவறான முன்
உதாரணங்களாகத் திகழ்கின்றார்கள் .இவர்கள் செய்யும் அநியாயங்களை நாளிதழ்கள் மூலம் அறியும் போது
இதயம் ஒரு அணு குண்டு போல வெடித்துச் சிதறிவிடும் போலிருக்கின்றதே .
இந்திய மக்கள் நேர்மையாக வாழ வழி எங்கு தேடியும் கிடைக்காமல்
வன் எண்ணங்களை வளர்த்துக் கொண்டு விட்டார்கள் .மனிதர்கள் மனிதர்களை
வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள் . கட்டுப்பாடுகளை எல்லாம் காலிலிட்டு மிதித்து
எட்டித் தள்ளி விட்டு துணிந்து வருகின்றார்கள் .ஆதரவு தேடியவர்களுக்கு அன்பு காட்டி அடைக்கலம் தராமல் ஆத்திரமடைந்தவனுக்கு அறிவுரை கூறுவது என்ன
பயன் தரும் .

உள்ளுக்குள் ஊடுருவும் எதிர் மறையான சமுதாயப் போக்குகள் இன்றில்லா விட்டாலும்
ஒருநாள் பேரழிவை ஏற்படுத்தலாம் . இது ஆழிப் பேரலை சுனாமி இல்லை .வலியஎண்ணங்களின் சுனாமி .

No comments:

Post a Comment