Saturday, April 21, 2012

creative thoughts- kettavai

தமிழர்களின் தன்மான உணர்ச்சிக்கு ஈடு இணை இல்லை தமிழர்களின் வாழ்க்கையில் எப்போதும் உணர்சிகளுக்கு இடமுண்டு அதிலும் தமிழச்சிகளின் உணர்வுகள் வலிமயானது.உலகில் எந்த நாட்டினராயினும்,எந்த இனத்தவராயினும்,தமிழச்சிகளின் உணர்வுகளுக்கு மேலானது எதுவுமில்லை என்று எங்கள் ராஜ ராஜன் கல்லூரியின் ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த திருச்சி,டிஎஸ்பி ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்ற A.கலியமூர்த்தி ஓர் உண்மை நிகழ்ச்சி மூலம் எடுத்துரைத்தார். "ஒரு முறை தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி காவல் துறைக் கண்காணிப்பாளர்களிடையே ஜம்முவில் நடை பெற்றது. மாநிலத்திற்கு இருவர் எனப் போட்டியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர். ஏற்கனவே மூன்று முறை தங்கப் பதக்கம் வென்றதால் அப் போட்டியில் கலந்து கொள்ள நான் தேர்வு செய்யப்பட்டேன். என்னுடன் சைலேந்திர பாபு,விஜயகுமார் மற்றும் ஜாங்கிட் போன்ற பலரும் வந்திருந்தனர். பல சுற்றுக்களுக்குப் பிறகு நானும் கேரளாவிலிருந்து வந்த அஞ்சலி என்ற பெண் காவல் கண்காணிப்பாளரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினோம். இறுதிப் போட்டியில் நான் சுட்ட 6 இரவைகளில் 5 இலக்கின் மையத்திலும் புல்)ஒன்று சற்று விலகியும் துளைத்திருந்தன.அஞ்சலியும் அதுபோலச் சுட்டதால் யார் வெற்றி பெற்றவர் என்று தீர்மானிப்பதில் சிக்கல் இருந்தது. அஞ்சலி சுட்ட இலக்கை நான் ஆராய்ந்த,அவர் என்னை விட வேகமாகவும் துல்லியமாகவும் சூடுகின்றார் எனத் தெரிந்தது.சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவு செய்யலாமா என்று நடுவர் கேட்ட போது நான் அதற்கு உடனே ஒப்புக் கொண்டேன் .தொடர்ந்து மூன்று முறை தங்கப் பதக்கம் வாங்கிய நான் இம்முறை அதை இழக்க விரும்ப வில்லை.அதனால் சீட்டு எனக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கை எனக்குள் அப்போது பெரிதாய் தோன்றி இருந்தது. ஆனால் அதற்கு அஞ்சலி ஒப்புக் கொள்ளவில்லை “.இது ஒருவரின் திறமையை மதிப்பிடும் போட்டி .உண்மையான திறமையே ஒருவரின் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டும், வாய்ப்புகள் அல்ல” என்றார் . எனவே மீண்டும் போட்டி தொடங்கியது,இம் முறை 10 இரவைகள்,தொலைவு 300 மீட்டரிலிருந்து 500 மீட்டர் . அதில்"நான் 9 இரவைகளை இலக்கின் மையத்திலும் ஒன்றை சற்று விலகியும் சுட்டேன் . எனக்கே வெற்றி என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அஞ்சலி 10 இரவைகளையும் மிகச் சரியாக இலக்கின் மையத்தில் சுட்டதால் அவரே போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டார்" . வருத்தமாக இருந்த என்னை நோக்கி வந்த அஞ்சலி" ஐயா கலியமூர்த்தி அவர்களே,இதற்காக வருத்தப் படாதீர்கள்.நான் கேரளாவிலிருந்து வந்திருந்தாலும்,உண்மையில் நான் ஒரு தமிழச்சி.நீங்கள் மூன்று முறை என் தந்தையை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றீர்கள்.என் தந்தையை வென்ற உங்களை வெல்ல வேண்டும் என்பதே என் குறிக்கோளாக இருந்தது.அதற்காக நான் தந்தையிடம் தீவிரமாகப் பயிற்சி எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றேன்" என்று சொன்னார். "அவர் வெற்றி பெற்றதற்கு பயிற்சி மட்டும் காரணமில்லை உணர்சிக்களும்தான் என்பதைப் புரிந்து கொண்டேன் ஒரு தமிழச்சியின் வலிமையான உணர்சிகளுக்கு முன்னால் நான் தோற்று நின்றேன்"

No comments:

Post a Comment