Saturday, April 7, 2012

creative thoughts

பழ மொழிகளுக்குப் புதுப் புளி போட்டு விளக்கினால்


எப்போதும் ஒரே மாதிரியாக அதே பழ மொழிகளைப் பயன்படுத்துவதைத்
தவிர்க்கலாமே என்று நினைத்தேன் . தப்பில்லை தானே .
1 வருஷம் வருடமானால் ,புருஷன் புருடனாகுமா ?
2 . திருடிய லட்டை மறைக்க கொட்டாவி விட்டவன் வாயில் திணித்தானாம்.
3 . மாப்பிளை பேரு ராவணனாய் யிருந்தா சீதையைப் பெண் பார்க்கக் கூடாது .
4 . அண்ணன் பேரு ராமன் தம்பி பேரு ராவணனா ?
5 . தூரத்திலிருந்து பார்த்தா கிழவிகூட கண்ணுக்கு அழகாத் தான் தெரிவாள் .
6 . ஆத்திலே மீன் பிடிக்கத் தெரியாதவன் ஆழ்கடலில் சுறாபிடிக்கப் போனானாம் .
7 . சும்மா இருந்தா முடி வளரும் மூளை வளருமா ?
8 சும்மா இருந்தா பொழுது விடியலாம் பொருள் வருமா ?
9 . ஒரு சீதை மருமகளாய் வரணும்னா பிறக்கும் போது பிள்ளைக்கு இராவணன் என்று பெயர் சூட்டக் கூடாது .
10 யானையாய் இருந்தாலும் பூனையாய் இருந்தாலும் காதல் ஒன்றுதான் .

No comments:

Post a Comment