Friday, April 20, 2012

creative thoughts-eluthaatha kaditham

எழுதாத கடிதம் "நல்லாப் படி,கெட்டிக்காரனாக இரு" வீட்டில் அப்பா அடிக்கடி கூறும் அறிவுரை. "படி,முயற்சி செய்,திறமையை வளர்த்துக் கொள்,வல்லவனாக இரு" பள்ளியில் ஆசிரியர் அடிக்கடி கூறும் வார்த்தைகள்.வீட்டிற்கு வரும் உறவினர்களும்,பெற்றோர்களின் நண்பர்களும் ,பள்ளி விழாக்களுக்கு வந்து செல்லும் சிறப்புச் செற்பொழிவாளர்களும் அடுக்கு மொழிகளுடன் இதையே கூறுகின்றார்கள்.அதற்கு அறிவியல் அறிஞர் அப்துல் கலாம்,காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசன்,கணித மேதை இராமானுஜம்,நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வீ.ராமன் போன்ற நம்மவர்களையும்,அமெரிக்க ஜனாதிபதி அப்ரகாம் லிங்கன்,குத்துச் சண்டை வீரர் முகமது அலி,கணனித் துறையில் கோலோச்சும் பில் கேட்ஸ் போன்ற வெளிநாட்டுக்காரர்களையும் சிலர் உதாரணம் காட்டிக் கூறுவார்கள். வேறு சிலர் தங்கள் வாழ்கையில் சாதித்துக் காட்டிய நிகழ்ச்சிகளை படம் பிடித்துக் காட்டுவார்கள்.முன்னேறி வாழ்க்கையில் சிறப்படைவதற்கு முன்னோர்களால் தேர்வு செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்ட வழி முறை இதுதான், இதைவிட சிறந்த வேறு வழி வேறொன்றும் இல்லை என்பதைத்தான் இவை சொல்லாமல் சொல்கின்றன. ஒரு நாள் ஒரு மாணவன் என்னிடம் கேட்டான். " எல்லோரும் திறமை சாலிகளாகவும், வல்லவர்களாகவும் வளர்ந்து விட்டால் அதற்கான தேவை இந்த நாட்டில் இருக்கிறதா ?" இதில் ஒரு பெரிய இடைவெளி இருப்பதை அவன் உணர்ந்திருக்கின்றான் .அந்த இடைவெளி நாளுக்கு நாள் அகன்றும் ,ஆழமாகிக் கொண்டும் வருகிறது.அந்த இடைவெளியைத் தாண்ட முடியாமல் இடையில் விழுந்து புதைந்தவர்களின் மௌன மொழி யாருக்கும் கேட்க வில்லை,தமிழ் மொழியில் ஙகர வரிசை யில் உள்ள உயிர்மெய் எழுத்துக்களைப் போல . சம்பாதிப்பவன் தன்னுடைய தேவைக்காகத்தான் சம்பாதிக்க வேண்டும் .தேவை இல்லாமல் தேவைக்கு மேல் சம்பாதிப்பவன் மற்றவனுடைய சம்பாத்தியத்தில் கை வைக்கின்றான். . அதுபோல திறமையானவர்களும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்திக் காட்ட வாய்ப்புக்களைப் பெறவேண்டும் வாய்ப்புக்களைத் தேடுவது அவர்களுடைய பொறுப்பு என்றாலும் ,திறமையை ஊட்டும் நாமும் அவர்கள் தேடும் வாய்ப்புக்களை உருவாக்கி அவர்களுக்குக் கிடைக்குமாறு செய்யவேண்டும். போட்டா போட்டிகளில் எல்லா பொறியியல் கல்லூரிகளும் placement programme என்ற பெயரில் இதைத்தான் செய்துவருகின்றன. மக்களுக்காக நாடும் இதைச் செய்ய வேண்டும் .அந்த மாணவனுடைய மௌன மொழிக்கு இது தான் உரையோ .

No comments:

Post a Comment