Monday, April 23, 2012

creative thoughts- kettavai

சூரியன் எழுவதற்கு முன்னர் எழ வேண்டும் என்று சான்றோர்கள் கூறுவார்கள் . இறைக்கு பெரும்பாலான மாணவர்கள் இரவில் வெகு நேரம் தூங்காமல் பொழுதைக் கழித்தாலும் கழிபார்கள் ஆனால் விடியற் காலையில் சீக்கிரமாக படுக்கையை விட்டு எழ மாட்டார்கள். எங்கள் ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்புரை ஆற்றிய திருச்சி ஓய்வு பெற்ற டி எஸ் பி திரு A .கலியமூர்த்தி இதையே வேடிக்கையாகவும் விவரமாகவும் கூறிய போது மாணவர்கள் அதை சிரிப்பொலியுடன் உள்வாங்கிக் கொண்டார்கள் . காலையில் 3 மணிக்கு எழுந்திருப்பவன் முனிவன் ,4 மணிக்கு எழுந்திருப்பவன் ஞானி ,5 மணிக்கு எழுந்திருப்பவன் அறிஞன் , 6 மணிக்கு எழுந்திருப்பவன் மனிதன் ,7 மணிக்கு எழுந்திருப்பவன் எருமை என்று சொல்லிவிட்டு இதில் நீங்கள் எந்த இரகம் என்று கேட்க மாணவர்கள் சிரிப்போடு சிந்திக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்

No comments:

Post a Comment